கனடாவின் ஒட்டாவா மாநகரில் அமைந்துள்ள ‘ ‘ வளாகத்தில் தனது முக்கியமான ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மார்க் கார்னி உற்சாகத்துடன் அறிவிப்பு
“கனடாவைப் பொறுத்தளவில் எமது புதிய ஆட்சிக் காலம் என்பது தேசத்தின் புதிய நூற்றாண்டாக எதிர்காலத்தில் பார்க்கப்பெறும். எமது புதிய ஆட்சியில் கனடாவின் இராணுவக் கட்டமைப்பில் புதிய மாற்றங்களை எமது மக்கள் எதிர்காலத்தில் கண்டு வியப்படையப் போகின்றார்கள். ஏன் உலகமே வியக்கப்போகின்றது. எம்மோடு கைகோர்த்து பயணிக்கப் போகின்ற பல ஐரோப்பிய நாடுகளின் பங்களிப்புடன் எமது கனடிய தேசம் பலமான இராணுவக் கட்டமைப்பையும் இராணுவத் தளபாடங்களின் உற்பத்தி நாடாகவும் உயரப் போகின்றது. அத்துடன் அடுத்த வாரத்தில் கனடாவின் அல்பேர்ட்டா மாகாணத்தில் நடைபெறவுள்ள ஜி-7 நாடுகளின் மாநாட்டின் பின்னர் எமது நாட்டின் வளர்ச்சியையும அந்தஸ்த்தையும் உலக நாடுகள் பார்த்து வியக்கப்போகின்றன”
இவ்வாறு கனடாவின் ஒட்டாவா மாநகரில் அமைந்துள்ள ‘ போர்க் கால நூதன சாலை ‘ வளாகத்தில் தனது முக்கியமான ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மார்க் கார்னி உற்சாகத்துடன் அறிவித்தார்.
09-06-2025 அன்று திங்கட்கிழமை மாலை நடைபெற்ற ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் கலந்து கொண்ட மேற்படி கூட்டத்தில் பிரதமர் மார்க் கார்னி அவர்கள் உற்சாகமாகவும் உறுதி நிறைந்த மனதுடனும் உரையாற்றினார்.
அங்கு தமிழ் பேசும் அமைச்சர் ஆனந்தசங்கரி உட்பட பல அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இங்கு காணப்படும் படங்களில் வர்த்தகப் பிரமுகர் சங்கர் நல்லதம்பி மற்றும் உதயன் பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கம் ஆகியோரும் பிரதமர் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்களோடு காணப்படுகின்றார்கள்.