ந.லோகதயாளன்.
சாவகச்சேரி நகர சபை மற்றும் பிரதேச சபைகளில் போட்டியிட்டு உறுப்பினர்களாக தேர்வான இருவருக்கு எதிராக தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டு மே மாதம் 6ஆம் திகதி இடம்பெற்ற உள்ளூராட்சி சபைகளிற்கான தேர்தலின்போது சாவகச்சேரி நகர சபை மற்றும் பிரதேச சபைகளில் போட்டியிட்டு உறுப்பினர்களாக தேர்வான இருவர் அந்த சபை எல்லைப் பரப்பிற்குள் தம்மை ஓர் வாக்காளராக பதிவு செய்வதற்கு தகுதி அற்றவர்கள் என்ற அடிப்படையில் இருவரின் உறுப்புறுமைகளை இரத்து செய்ய தேர்தல்கள் ஆணைக் குழுவிற்கு உத்தரவிடக்கோரி இரு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட இந்த இரு வழக்கும் 11ம் திகதி புதன்கிழமைஅன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
சாவகச்சேரி நகர சபை மற்றும் பிரதேச சபைகளில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்வான இரு உறுப்பினர்கள் சார்பிலும் சிரேஸ்ட சட்டத்தரணி குமரவடிவேல் குருபரன் ஆஜராவதோடு வழக்குத் தொடுநர் சார்பில் சிரேஸ்ட சட்டத்தரணி சுரேன் பெணான்டோ ஆஜயராகின்றார்