தாய்லாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் சுசிந்தா கிரப்ரயூன் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 91. தலைநகர் பாங்காங்கில் 1933-ம் ஆண்டு அப்போதைய ராணுவ தளபதிக்கு கடைசி மகனாக சுசிந்தா கிரப்ரயூன் பிறந்தார். தொடர்ந்து தந்தையின் அடிச்சுவடுகளை பின்பற்றி சுசிந்தா கிரப்ரயூன் தாய்லாந்து ராணுவத்தில் 1953-ம் ஆண்டு கர்னலாக பதவியேற்றார். பின்னர் தன்னுடைய சீரிய முயற்சியாலும், ஆர்வ மிகுதியால் ராணுவத்தில் உயரிய பதவிகளை அவர் அலங்கரித்தார். 1990-ம் ஆண்டு ராணுவ தளபதியாக சுசிந்தா கிரப்ரயூன் பதவியேற்றார். இந்தநிலையில் 1991-ம் ஆண்டு தாய்லாந்து நாட்டின் பிரதமராக இருந்த சச்சிசாய் சுன்னவான் ஆட்சி, சுசிந்தா கிரப்ரயூனின் தலைமையிலான ராணுவ படையினரால் கவிழ்க்கப்பட்டது. இதனால் அந்த நாட்டின் 19-வது பிரதமராக சுசிந்தா கிரப்ரயூன் பதவியேற்றார். 2 ஆண்டுகள் பதவியில் இருந்தநிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து ராணுவத்தில் இருந்தும் விலகி ஓய்வில் இருந்தநிலையில் தனது வீட்டில் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார்.
