தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நடந்த விழாவில் அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தார்.
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உலக ரத்தக் கொடையாளர் தின விழா மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தலைமையில் நடைபெற்றது. விழாவில், சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தார். விழாவில் பேசிய அமைச்சர், “எல்லா இளைஞர்களும், பெண்களும் ரத்ததானம் செய்து நோயாளிகளை காப்பாற்ற உதவ வேண்டும்” என்று தெரிவித்தார். முன்னதாக ரத்த தானம் குறித்த விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் துவக்கி வைத்தார்.