தமிழில் 2025-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 24 மொழிகளில் பல்வேறு எழுத்தாளர்கள் எழுதி வெளியான சிறுகதை, கவிதை, நாடகம், கட்டுரை ஆகியவற்றுக்கு பால புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 2025-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமியின் பால புரஸ்கார் விருது ‘ஒற்றைச் சிறகு ஓவியா’ என்ற சிறார் கதைகளுக்காக எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
