தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களுக்கு 4 புதிய திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அப்போது அவர் கூறியதாவது: தூத்துக்குடியில் 250 ஏக்கரில் விண்வெளி பூங்கா அமைக்கப்படும். நெல்லையில் உணவு பதப்படுத்தும் மண்டலம் அமைக்கப்படும். தூத்துக்குடி, நெல்லையில் முருங்கை ஏற்றுமதி புது மையம் ரூ.5.55 கோடியில் அமைக்கப்படும். கப்பல் தொழில் வளர்ச்சிக்கு தேவையான கட்டுமான தளம் தூத்துக்குடியில் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
























