விடுதலைப்புலிகளுக்குக்கு உணவு வழங்கினார் என்ற குற்றச்சாட்டில் பதுளையை சேர்ந்த காத்தாய் என்ற 69 வயது பெண் 1994ல் கைது செய்யப்பட்டார்.
19 வருடங்களாக அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு ஏற்பட்ட புற்றுநோய் மற்றும் படுக்கை புண்களுக்கு சிகிச்சை வழங்கப்படவில்லை. அதனால் அவர் 2013 இல் சிறையில் பரிதாபகரமாக மரணமானார்.
ஒரு மலையக மூதாட்டிக்கு சிகிச்சை மறுக்கப்பட்டு மரணம் அடைந்தது ஜனநாயக படுகொலையாக மலையக தலைவர்களான மனோ கணேசன், திகா போன்றவர்களுக்கு தெரியவில்லை. இவர்களில் திகாம்பரம் என்பவர் ஒரு கஞ்சா கடத்தல்காரர் என்று மோசடி மன்னன் மகிந்தாவினால் எச்சரிக்கப்பட்டவர்
ரணில் என்றவுடன் வீதிக்கு இறங்கி கூக்குரல் போடுகிறார்கள். ஆனால் மக்கள் பணம் 160 லட்சம் ரூபாவை சுருட்டியருக்கு 3 நாட்களில் பிணை வழங்கியமை ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என்கிறார்கள்.
ஒருவன் அயோக்கியன் என்று நன்கு தெரிந்தும் அவனை நியாயப்படுத்த முயல்பவன் அவனைவிட அயோக்கியன் ஆவான்.
160 லட்சம் ரூபா மக்கள் பணத்தை சுருட்டிய ரணிலை நியாயப்படுத்த முயல்வோர் ரணிலைவிட அயோக்கியர் ஆவர்.
முதநூலின் தோழர் பாலன் பதிவிருந்து.. (சில மாற்றங்களுடன் கனடா உதயன் ஆசிரியபீடம்)
























