பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கடிதத்தின் பிரகாரம் வடக்கு மாகாண சபைக்கு இடமாற்றலாகி செல்லும் திரு.சாம்பசிவம் சுதர்சன் 21ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்றையதினம் (21.10.2025) அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபனிடம் தமக்கான இடமாற்ற விடுவிப்புக் கடிதத்தினைப் பெற்றுக்கொண்டார்.
இவர் யாழ்ப்பாண பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளராக கடமையாற்றினார். தற்போது வடக்கு மாகாண சபையில் தமது கடமையினை பொறுப்பேற்க்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
























