இஸ்ரேல் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் கிதியோன், அடுத்த வாரம் இந்தியாவுக்கு வருகை தர உள்ளார். இந்த பயணத்தின்போது இந்திய அரசின் பல்வேறு உயர்மட்டத் தலைவர்களைச் சந்தித்து இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய முன்னேற்றங்கள் குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இதன்படி வருகிற நவம்பர் 4-ந்தேதி அவர் இந்தியாவிற்கு வர உள்ளதாகவும், இந்தியாவில் 2 நாட்கள் தங்கியிருந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் இஸ்ரேல் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் பிரதமர் மோடி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை சந்தித்து பேச உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
























