அமெரிக்கா இஸ்ரேல் உடன் இணைந்து ஈரான் மீது கூட்டு தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகள் மீது ஈரான் சரமாரி ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரான் தாக்குதல் நடத்தும் வளைகுடா நாடுகளில் பஹ்ரைனும் ஒன்று. தங்கள் நாட்டின் மீது ஈரான் தாக்குதல் நடத்துவதை துரோகம் என்று பஹ்ரைன் தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் தங்கள் நாட்டின் மீது ஈரான் செலுத்திய 78 ஏவுகணைகள், 143 டிரோன்களை அழித்ததாக பஹ்ரைன் பாதுகாப்புப்படை தெரிவித்துள்ளது.
























