உத்தர பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் 3-வது முறையாக பிரதமர் மோடி போட்டியிடுகிறார். இந்தத் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை பிரதமர் மோடி இன்று (மே 14) தாக்கல் செய்தார்.
முன்னதாக, கங்கை நதியில் அவர் சிறப்பு பூஜைகள் நடத்தினார். வேத பட்டர்கள் மந்திரம் ஓத, பிரதமர் மோடி கங்கை நதியில் மலர்கள் தூவி வணங்கினார். தொடர்ந்து ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கங்கை நதி பற்றி, பிரதமர் மோடி கூறியதாவது:-
கங்கை நதியின் தத்துப்பிள்ளை நான். என் தாய் மறைவுக்குப்பின் கங்கை குறித்து மிக நெருக்கமாக உணர்கிறேன். கங்கை என்னை வலுப்படுத்தி தேற்றியது. கங்கை நதி தாயைப் போல் அனைவரையும் காக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
தாயை குறித்துப் பேசும் போது பிரதமர் மோடி கண்கள் கலங்கின. அவரது குரல் தழு தழுத்தது. மேலும்,140 கோடி மக்களுக்காக நான் உழைக்கிறேன். இது கடவுள் உத்தரவு என்று கூறினார்.