ஆந்திர மாநிலம் பபட்லா மாவட்டம் சின்னகஞ்சம் பகுதியில் இருந்து ஐதராபாத் நோக்கி ஆம்னி பஸ் புறப்பட்டது. அந்த பஸ்சில் 42 பேர் பயணித்தனர்.
பல்நாடு மாவட்டம் சில்லக்கல்ரிபேட்டை பகுதியில் இன்று (மே 15) அதிகாலை சென்றுகொண்டிருந்தபோது சாலையில் எதிரே வந்த லாரி மீது பஸ் அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பஸ் முழுவதும் தீப்பற்றியது.
அதிகாலை என்பதால் பயணிகள் அனைவரும் உறங்கிக்கொண்டிருந்தனர். தீ மளமளவென பஸ் முழுவதும் பரவியது. இந்த விபத்தில் பஸ் டிரைவர், பயணிகள் என மொத்தம் 6 பேர் தீயில் உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.