விஜய் சேதுபதியின் 51வது திரைப்படத்தின் தலைப்பை இன்று அறிவிக்க உள்ளதாக தனது எக்ஸ் தளத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் அண்மையில் ‘விடுதலை பாகம் 1’, ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ ஆகிய படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. இதனை தொடர்ந்து பாலிவுட்டில் தடம் பதித்த விஜய் சேதுபதியின் ‘ஃபார்ஸி’ வெப் தொடர் தமிழ் மற்றும் ஹிந்தி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. பல்வேறு படங்களில் மும்மரமாக நடித்து வரும் நிலையில், இவரின் 50-ஆவது படமான “மகாராஜா” விரைவில் வெளியாக உள்ளது. குரங்கு பொம்மை படத்தின் இயக்குநர் நிதிலன் சுவாமிநாதன் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்நிலையில் விஜய் சேதுபதியின் 51வது படத்தின் தலைப்பு இன்று வெளியாகும் என தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். விஜய் சேதுபதியின் 51 வது படத்தை ஆறுமுககுமார் என்ற இயக்குனர் இயக்கி வந்தார் என்பது குறிப்பிடதக்கது.