ஜி.வி. பிரகாஷை பிரிவதாக பாடகி சைந்தவி அறிவித்துள்ள நிலையில், அவர்களது உறவு குறித்து வலையொளி சேனல்களில் வெளியாகும் காணொளிகள் வருத்தம் அளிப்பதாக சைந்தவி வேதனை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில், “எங்கள் தனிப்பட்ட விவகாரத்திற்கு மதிப்பளிக்க வேண்டுகோள் வைத்தும் பல வலையொளி சேனல்கள் அவர்களுக்கு கிடைத்த தகவலைக் கொண்டு கட்டுக்கதைகளை உருவாக்குவது மனஉளைச்சலைத் தருகிறது. எங்கள் விவாகரத்துக்கு யாரும் காரணம் இல்லை. ஒருவரின் மதிப்பை குலைப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. எங்களின் நலனுக்காக இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு இது. பள்ளி காலத்திலிருந்தே நானும் ஜி.வி. பிரகாஷும் கடந்த 24 ஆண்டுகளாக நண்பர்களாக இருக்கிறோம். இனியும் அந்த நட்பைத் தொடர்வோம். நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.