அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் வடக்கு சார்லோட் பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் இந்தியாவை சேர்ந்த மென்பொருள் பொறியியலாளர் ஒருவர் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
அவர் அப்பாராஜு பிருத்விராஜ் (வயது 30) என அடையாளம் காணப்பட்டு இருக்கிறார். தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் எல்.பி. நகர் பகுதியை சேர்ந்தவர். பிருத்விராஜ், அவருடைய மனைவி மற்றும் நண்பர்கள் கார் ஒன்றில் சென்றபோது, திடீரென மற்றொரு வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த சம்பவத்தில், காரில் ஏர்பேக் எனப்படும் பாதுகாப்பு வசதி இருந்துள்ளது. இதனால், விபத்தில் காரில் இருந்தவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அனைவரும் காரை விட்டு வெளியேறி சாலையோரம் நடந்து சென்றனர்.
எனினும், விபத்து பற்றி போலீசாரிடம் தெரிவிக்க காரில் இருந்த மொபைல் போனை எடுப்பதற்காக பிருத்விராஜ், திரும்பி வந்திருக்கிறார். அப்போது மற்றொரு வாகனம் அவர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். இரவில் நடந்த இந்த விபத்தில் அவரை காணாமல், அவருடைய மனைவி மற்றும் தோழி ஆகியோர் நெடுநேரம் அந்த பகுதியில் தேடியுள்ளனர்.
இவருடைய சகோதரி பிரதியுஷா கூறும்போது, 2 ஆண்டுகளுக்கு முன் அவர்களுடைய தந்தை உயிரிழந்த நிலையில், சகோதரர் விபத்தில் உயிரிழந்த தகவல் வந்து சேர்ந்தது. அது அதிக வலியை தருகிறது என கூறியுள்ளார்.