கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாக் கவியரங்கத்துக்கு கவிஞர் வைரமுத்துவுக்கு
அமைச்சர் மா.சுப்பிரமணியன் அழைப்பிதழ் வழங்கினார். இதுபற்றி, கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள பதிவு வருமாறு:-
“கலைஞர் நூற்றாண்டு
நிறைவு விழாக் கவியரங்கத்துக்கு
அழைப்பிதழ் தர வந்தார்,
அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சரவையில்
இவர் ஓர் உறங்காப்புலி
மக்கள் பணிநோக்கி
ஓட்டமும் நடையுமாய்
ஓடிக்கொண்டே இருப்பவர்.
நடைப்பயிற்சி இவரால்
நகரமெங்கும்
உற்சாகம் பெற்றது.
அதை வரவேற்று
நான் ஒரு
வாசகம் சொன்னேன்.
‘நடக்க நடக்க
நன்மை நடக்கும்.’
‘நல்ல வாசகம் – இதை
நகரச் சுவர்களில்
எழுதிப் போடுங்கள்’ என்று
உடனே உத்தரவிட்டார்.”
இவ்வாறு வைரமுத்து பதிவிட்டுள்ளார்.