கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் விடிய விடிய கனமழை பெய்த நிலையில் பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 1200 கன அடி தண்ணீர் பாசன கால்வாய்களிலும், மறுகால் வழியாகவும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேற்கு மத்திய வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விடாமல் கன மழை பெய்தது. ஒரு சில இடங்களில் மிக கனமழை கொட்டி தீர்த்தது. மலையோர பகுதிகள், அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் அணைகளுக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால்
பேச்சிப்பாறை அணையில் மறுகால் திறக்கப்பட்டது.
வினாடிக்கு 520 கன அடி தண்ணீர் மறுநாள் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும், 636 கன அடி தண்ணீர் பாசன கால்வாய்களில் திறந்து விடப்பட்டுள்ளது. அந்த வகையில் மொத்தம் 1200 கன அடி தண்ணீர் பேச்சிப்பாறை அணையிலிருந்து திறந்து விடப்பட்டுள்ளது.
மறுகாலில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குளிக்கவோ, கால் நடைகளை குளிப்பாட்டவோ நீர்நிலைகளில் இறங்க வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் நேற்று (மே 23)பெய்த கனமழை காரணமாக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தது. போக்குவரத்து பாதிப்பும் மின்தடையும் ஏற்பட்ட வண்ணம் காணப்பட்டது. அதனை தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் விரைந்து வந்து சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
நாகர்கோவில் ராமன்புதூர் பகுதியில் அரசு கலை அறிவியல் கல்லூரி அருகில் சாலையில் விழுந்த வேப்பமரம் பாதுகாப்பான முறையில் அகற்றப்பட்டு போக்குவரத்து சீராக்கப்பட்டது. இதனைப் போன்று பறக்கை பகுதியில் சாலையில் விழுந்த வேப்பமரம் அகற்றப்பட்டது. மாவட்டத்தில் மழை காரணமாக மேலும் 5 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயங்கள் இல்லை.
மாவட்டத்தில் மே 23 காலை வரை அதிகபட்சமாக மயிலாடியில் 140.2 மி. மீ மழை பெய்திருந்தது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 45.25 அடியாகும். அணைக்கு 1239 தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பெருஞ்சாணி நீர்மட்டம் 51.3 அடியாகும். அணைக்கு 678 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. அணை மூடப்பட்டிருந்தது. சிற்றாறு-1 ல் 12.46 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு 178 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. சிற்றாறு-2 ல் 12.56 அடியாக நீர்மட்டம் உள்ளது. பொய்கையில் 12.4 அடியும், மாம்பழத்துறை அணையில் 16.4 அடியும் நீர்மட்டம் உள்ளது. மாம்பழத்துறையாறு அணையில் வினாடிக்கு 11 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. முக்கடல் அணையின் நீர்மட்டம் 2.7 அடியாகும்.
குமரி மாவட்ட மழையளவு
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (மே 23) காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
கன்னிமார் 43.2
கொட்டாரம் 81.2
மயிலாடி 140.2
நாகர்கோவில் 36.0
ஆரல்வாய்மொழி 54.0
பூதப்பாண்டி 60.4
முக்கடல் 47.6
பால மோர் 65.2
தக்கலை 83.2
குளச்சல் 72.2
இரணியல் 45.0
அடையாமடை 34.3
குருந்தன்கோடு 82.8
கோழிப்போர்விளை 63.2
மாம்பழத்துறையாறு 78.4
சிற்றாறு-1 36.2
சிற்றாறு -2 41.2
களியல் 33.8
குழித்துறை 37.0
பேச்சிப்பாறை 58.0
பெருஞ்சாணி 52.6
புத்தன் அணை 48.4
சுருளோடு 54.2
ஆனைக்கிடங்கு 77.2
திற்பரப்பு 54.8
முள்ளங்கினாவிளை 48.2