அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ஜாக்சன் வில்லி பகுதியில் 104 வயது மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். சம்பவத்தன்று அவரது வீட்டிற்குள் முதலை ஒன்று புகுந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் காவல்துறைக்கும், வன அலுவலருக்கும் தகவல் தெரிவித்தார். அங்கு சென்ற வனத்துறையினர் அந்த முதலையை பத்திரமாக மீட்டு சென்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியது.