சென்னையிலிருந்து, மும்பை சென்ற இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, மும்பையில் விமானம் அவசரமாக தரையிரக்கப்பட்டது.
சென்னை விமான நிலையத்திலிருந்து காலை இண்டிகோ நிறுவனத்தின் ’6இ – 5134’ என்ற விமானம் 172 பயணிகளுடன் மும்பை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மும்பை விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, மும்பை விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. உடனடியாக அதிலிருந்த பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து, விமானம் முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இந்த சம்பவம் பயணிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.