கங்குவா’ படத்தை முடித்துவிட்டு நடிகர் சூர்யா தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘சூர்யா 44’ படப்பிடிப்பைத் தொடங்க உள்ளார். சமீபத்தில் படத்தின் தொழில்நுட்பக் குழுவினர் குறித்தான பதிவேற்றம் வெளியானது. ஆனால், படத்தில் நடிகர் சூர்யா தவிர்த்து வேறு யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்ற பதிவேற்றம் இன்னும் வெளியாகவில்லை. வருகிற ஜூன் 2 அன்று படக்குழு அந்தமானில் படப்பிடிப்பைத் தொடங்க இருக்கிறது. தொடர்ந்து 40 நாட்கள் படமாக்க இருக்கிறார்கள். அதிரடியான ஆக்சன் காட்சிகள்தான் முதலில் படமாகிறது. இதற்காக, அந்தமான் கிளம்பும் முன்பு சென்னையில் இருக்கும் காளிகாம்பாள் கோவிலில் தரிசனம் செய்திருக்கிறார் சூர்யா.
![சென்னை காளிகாம்பாள் கோவிலில் நடிகர் சூர்யா சாமி தரிசனம்](https://uthayannews.ca/wp-content/uploads/2024/06/Actor-surya-chennai-kalikambal-temple-darsanam.jpg)