டில்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் முதல்-அமைச்சர் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். அவருக்கு தேர்தல் பிரசாரம் செய்வதற்காக உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. இந்த ஜாமின் நேற்று முடிவடைந்தது. இதற்கிடையே, டில்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், நாடாளுமன்ற தேர்தலுக்கான கருத்துக் கணிப்புகள் அனைத்தும் போலியானவை. சர்வாதிகாரத்திற்கு எதிராகப் போராடுகிறேன். இந்த மாதிரியான சர்வாதிகாரத்தை நம் நாடு பொறுத்துக்கொள்ள முடியாது என்றார்.
இந்நிலையில், டில்லி முதல் அமைச்சர் கெஜ்ரிவால் திகார் சிறையில் சரணடைந்தார்