தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா, இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கும் ‘கங்குவா’ படத்தில் நடித்து வருகிறார். பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்டோர் இப்படத்தில் நடிக்கின்றனர். சூர்யாவின் திரை வரலாற்றில் அதிக பொருட்செலவில் உருவாகும் படமாக ‘கங்குவா’ அமைந்துள்ளது. இப்படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பை முன்வைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து நடிகர் சூர்யா கதாநாயகனாக நடிக்கும் 44வது படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். இந்த படத்தினை சூர்யாவும், கார்த்திக் சுப்புராஜும் இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படத்திற்கு தற்காலிகமாக ‘சூர்யா 44’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் இணைந்து நடிப்பதாக படக்குழு அறிவித்தது. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். அந்தமானில் உள்ள போர்ட் பிளேரில் படப்பிடிப்பை தொடங்க உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் படப்பிடிப்பை தொடங்கியதாக அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.
![‘சூர்யா 44’ படத்தின் படப்பிடிப்பை தொடங்கியதாக படக்குழு அறிவிப்பு](https://uthayannews.ca/wp-content/uploads/2024/06/Suriya-44-padam.jpg)