கலைஞரின் 101 வது பிறந்த நாளையொட்டி காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள செய்தி:-
“கலைஞர் அவர்களின் 101வது பிறந்த நாளன்று தமிழர்களும் தமிழ்நாடும் அவரை நினைவு கூர்ந்து அவரை நன்றியுடன் போற்றுகின்றன. அவர் வாழ்ந்தது அசாதாரண வாழ்க்கை, அவருடைய செயல்களும் சாதனைகளும் வரலாற்றுச் சிறப்பு மிக்கவை.
ஒரு மனிதன் ஒரு வாழ்நாளில் இத்தனைத் துறைகளில் இவ்வளவு சாதனைகளைச் செய்ய முடியும் என்று எனக்கு உணர்த்தியவர் கலைஞர்.”
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.