சல்மான்கான் மற்றும் ராஷ்மிகா நடிக்கும் ‘சிக்கந்தர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
ரஜினிகாந்த் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான ‘தர்பார்’ திரைப்படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய நிலையில் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியடையாததால் சினிமாவில் சில காலம் அவர் ஒதுங்கி இருந்தார். இந்நிலையில் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்திற்கு பிறகு பாலிவுட் நடிகர் சல்மான்கானை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் புதிய இந்தி திரைப்படம் இயக்குகிறார். இந்த திரைப்படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடிக்கிறார். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடிக்க உள்ள புதிய திரைப்படத்துக்கு ‘சிக்கந்தர்’ எனும் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாகும் எனவும் சல்மான்கான் தனது எக்ஸ் இணைய தளத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்நிலையில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் 18ம் தேதி தொடங்குகிறது என்று இந்த திரைப்படத்தின் தயரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.