சமீபத்தில் வெளியான நீட் தேர்வு முடிகள் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. பல்வேறு மாநிலங்களில் மீண்டும் நீட் தேர்வை நடத்தவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள மாணவர்கள், பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். தேசிய தேர்வுகள் முகமை சார்பில் இந்தாண்டு ஜூன் பருவத்துக்கான முதல் கட்ட நெட் தேர்வு சமீபத்தில் நடைபெற்றது. இந்த தேர்வை 9 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதினார்கள். இதற்கிடையே, யுஜிசி நெட் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், புதிய தேர்வு நடத்துவது தொடர்பான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என சொல்லப்பட்டு தேசிய தேர்வுகள் முகமை அறிவித்தது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: நாடாளுமன்றத்தில் யுஜிசி நெட் தேர்வு மற்றும் நீட் தேர்வு விவகாரத்தை நிச்சயம் எழுப்புவோம். பா.ஜ.க.வின் தாய் அமைப்பால் கல்வி முறை கைப்பற்றப்பட்டதே தேர்வு வினாத்தாள் கசிவுக்குக் காரணம். இது மாறாத வரை, வினாத்தாள் கசிவு தொடரும். மோடி ஜி இந்த பிடிப்பை எளிதாக்கினார். இது தேச விரோத செயல். ரஷியா-உக்ரைன் போரை மோடி தடுத்து நிறுத்தினார் என கூறப்படுகிறது. ஆனால் சில காரணங்களால், நரேந்திர மோடியால் இந்தியாவில் காகித கசிவை நிறுத்த முடியவில்லை அல்லது நிறுத்த விரும்பவில்லை.என தெரிவித்தார்.
![ரஷியா போரை நிறுத்துவதாக கூறிய மோடி, வினாத்தாள் கசிவை ஏன் நிறுத்தவில்லை? - ராகுல் காந்தி](https://uthayannews.ca/wp-content/uploads/2024/04/Amethi-rakul-potti.jpg)