கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திரூர் பகுதியை சேர்ந்தவர் அப்துல் கபூர் அவரது மகன் முகம்மது சினான்(9) அருகில் உள்ள ஒரு பள்ளியில் 4வது வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் அங்குள்ள ஒரு பள்ளிவாசலுக்கு செல்வதற்காக சினான் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றான்.
சிறிது நேரம் கழித்து சிறுவன் பக்கத்து வீட்டில் உள்ள ஒரு தானியங்கி கேட்டில் சிக்கி மயங்கி கிடப்பதை அந்த பக்கதினர் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே சிறுவனை மீட்டு அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
ஆனால், தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிறுவன் முகமது சினான் பரிதாபமாக
இறந்தான். இதற்கிடையேசினானை பார்ப்பதற்காக கபூரின் தாய் ஆசியா (51) மருத்துவமனைக்கு சென்றார். அப்போது பேரன் இறந்து விட்டான் என்ற தகவலை அறிந்த ஆசியா துக்கம் தாளாமல் அதிர்ச்சியில் உறைந்தார். சிறிது நேரத்திலேயே மருத்துவமனையில் வைத்து மயங்கி விழுந்தார். உடனே அவரை அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி ஆசியா மரணமடைந்தார். சிறுவன் சினான் இறந்தது குறித்து திரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.