கேரளாவில் போதைப் பொருள் பயன்பாடும், விற்பனையும் சமீபகாலமாக மிகவும் அதிகரித்து வருகிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை மிகவும் அரிதாக கிடைக்கக்கூடிய கோகைன்,
எம்டிஎம்ஏ போன்ற சர்வதேச சந்தையில் மிகவும் விலை அதிகம் உள்ள போதைப் பொருட்கள் தற்போது கேரளா முழுவதும் மிகவும் சுலபமாக புழக்கத்தில் உள்ளது.
பல்வேறு நாடுகளில் இருந்தும் பெங்களூரு, டெல்லி உள்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளாவுக்கு போதைப் பொருட்கள் கடத்தப்படுகின்றன.
பல்வேறு நூதன உத்திகளை கையாண்டு இவற்றை கும்பல்கள் கடத்தி வருகின்றன. இந்த நிலையில் கடந்த 16ம் தேதி தோகாவிலிருந்து கொச்சி மந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் சுங்கத்துறை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் வழக்கமான பரிசோதனை ஈடுபட்டனர். அந்த விமானத்தில் தான்சானியா நாட்டைச் சேர்ந்த ஒமாரி
அத்துமணி ஜோங்கோ( 56), வெரோனிக்கா அட்ரஹெம் துங்குறு(24) ஆகியோர் வந்திருந்தனர். அவர்களது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் நடத்திய தீவிர சோதனையில் 2 பேரும் கோக் கையின் போதைப் பொருளை கேப்சூல்களில் அடைத்து விழுங்கி கடத்தி வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து 2 பேரையும் வருவாய் புலனாய்வுத்துறையினர் அங்க மாலியிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில்
அனுமதித்தனர். அங்கு நடந்த பரிசோதனையில் ரெண்டு பேரின் வயிற்றுக்குள் 4 கிலோவுக்கு மேல் போதை பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ஒமாரியின் வயிற்றுக்குள் இருந்து 1.945 கிலோ கோகையின் வெளியே எடுக்கப்பட்டது. இவர் 100க்கும் மேற்பட்ட கேப்சூல்கள் விழுங்கி இருந்தார்.
வெரோனிக்காவின் வயிற்றிலிருந்து 92கேப்சூல்கள் வெளியே எடுக்கப்பட்டன. அதில் 1, 800 கிராம் இருந்தது. இவரது வயிற்றிலிருந்து இதுவரை 92 கேப்சூல்கள் வெளியே எடுக்கப்பட்டன. அவரது வயிற்றில் மேலும்,
கேப்சூல்கள் உள்ளன. இதனால் அவர் தொடர்ந்து
மருத்துவமனையிலேயே உள்ளார்.
ஒமாரியை விசாரணைக்கு பின் வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் அங்கமாலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைப்பற்றப்பட்ட கோக்கையின் மதிப்பு ரூ. 30 கோடி என்று வருவாய் புலனாய்வுத் துறையினர் தெரிவித்தனர்.