கென்யாவில் பொதுமக்களின் கடுமையான எதிர்ப்பு காரணமாக புதிய வரி விதிப்பு மசோதாவை திரும்பப் பெறுவதாக அதிபா் வில்லியம் ரூட்டோ அறிவித்தார்..
கென்யாவில் அதிகரித்துவரும் விலைவாசியைக் குறைப்பதாக வாக்குறுதி அளித்து கடந்த 2022-ஆம் ஆண்டில் ஆட்சியைப் பிடித்த வில்லியம் ரூட்டோ, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக சில சீா்திருத்தங்களை அறிவித்தாா். அதன் ஒரு பகுதியாக, ‘2024 பொருளாதார மசோதாவை அவா் அறிமுகப்படுத்தினார். வரி விதிப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் நடைபெற்று வரும் போராட்டத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 22-ஆக அதிகரித்துள்ளது. அதையடுத்து, அங்கிருந்து எம்.பி.க்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனா். பாதுகாப்புக்காக ராணுவம் வரவழைக்கப்பட்டது. போராட்டக்காரா்களின் இந்தச் செயல் ‘தேசத் துரோகம்’ என்று அதிபா் வில்லியம் ரூட்டோ குற்றஞ்சாட்டினார். இந்த நிலையில், மசோதாவை திரும்பப் பெறுவதாக அவா் தற்போது அறிவித்துள்ளார். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: “புதிய வரிகளை விதிப்பதற்கான பொருளாதார மசோதா நாடு முழுவதும் அதிருப்தி அலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் பொதுமக்களின் உணா்வுகளை ஏற்று, அந்த மசோதாவைக் கைவிடுகிறேன். அரசின் நடவடிக்கைகளில் அனைத்துத் தரப்பினரும் கூடி கருத்துகளைப் பரிமாறிக் கொள்வது அவசியம்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.