இசையமைப்பாளராக தன்னுடைய சினிமா வாழ்க்கையை துவங்கியவர் விஜய் ஆண்டனி. இவர் தொடர்ந்து நடிகர், தயாரிப்பாளர், பாடகர், இயக்குநர் என பன்முகம் காட்டி வருகிறார். விஜய் ஆண்டனி ‘மழை பிடிக்காத மனிதன்’ என்ற புதிய திரைப்படத்தில் நடித்துள்ளார். விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் சத்யராஜ், டாலி தனஞ்சயா, முரளி ஷர்மா, மேகா ஆகாஷ், தலைவாசல் விஜய், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை கமல் போஹ்ரா, லலிதா, பிரதீப் மற்றும் பன்கஜ் போஹ்லரா இணைந்து தயாரித்துள்ளனர். சில நாட்களுக்கு முன் இந்த திரைப்படத்தின் சென்சார்ஷிப் போர்ட் யூ/ஏ சான்றிதழை வழங்கியது. ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டத்தை படக்குழு கடந்த மாதம் வெளியிட்டது. அதைத்தொடர்ந்து படத்தின் இரண்டு பாடல்கள் வெளியானது. படத்தின் முன்னோட்டமும் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் மூன்றாவது பாடலான ‘இவன் யாரோ’ பாடலின் வரி காணொளி வெளியாகியுள்ளது. இந்த பாடலுக்கு விஜய் ஆண்டனியே இசையமைத்து பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
![விஜய் ஆண்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’ பாடல் காணொளியில் வெளியீடு!](https://uthayannews.ca/wp-content/uploads/2024/05/Mazhai-pidikatha-manithan-teaser-Vijay-antony.jpg)