பனை அபிவிருத்திச் சபையினால் உற்பத்தி செய்யப்படும் பனை சார் உற்பத்திப் பொருட்களை பொதுமக்கள் வீட்டில் இருந்தவாறு இணையவழி மூலம் பெற்றுக்கொள்ளும் புதிய வேலைத்திட்டம் இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக பனை அபிவிருத்தி சபையின் தலைவர் கிரிசாந்த பத்திராஜ தெரிவித்தார் .
யாழ்ப்பாணத்தில் உள்ள பனை அபி சபையின் தலைமை காரியாலயத்தில் நடைபெற்ற இந்த வைபவத்தில், வீடுகளில் இருந்தவாறு பனை உற்பத்திப் பொருட்களை கொள்வனவு செய்யும் புதிய வேலைத் திட்டம் முக்கிய பாகத்தை வகித்தது.
இதனை ஆரம்பித்து வைத்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சபையின் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்
“இன்றைய தினம் பனை அபிவிருத்தி சபைக்கு ஒரு புதிய யுகத்தில் காலடி வைக்கின்றது பனை அபிவிருத்தி சபையினால் சாதாரண விவசாய மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் முகமாக பனை அபிவிருத்தி சபையினால் வடபகுதி உள்ளிட்ட ஏனைய பகுதிகளில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில்
இன்றைய தினம் பனை அபிவிருத்தி சபையினால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களினை தற்போது உள்ள கொரோனா தாக்கத்தின் காரணமாக பொதுமக்கள் எமது விற்பனை நிலையங்களில் வந்து தமது பொருட்களை கொள்வனவு செய்யாது தமது வீடுகளில் இருந்தவாறு இணையவழி மூலம் தமது பொருட்களை ஓடர் செய்து வீட்டிற்கு பொருட்களை வீட்டில் இருந்தவாறே பெற்றுக் கொள்ளும் புதிய திட்டம் ஒன்றினை இன்றைய தினம் ஆரம்பித்து வைத்துள்ளோம் இன்றிலிருந்து இந்த திட்டம்செயற்படுத்தப்படும்