கொழும்பு நகரின் சில பகுதிகளின் மீது தொடர்ச்சியாக ஹெலிகொப்டர்கள் பறந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கிடைத்த தகவலை அடுத்தே ஹெலிகொப்டர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், ஏதேனும், சட்டவிரோத செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமாயின், அது தொடர்பில் உரிய தரப்பிற்கு அறிவிக்க விமானப்படை நடவடிக்கை எடுக்கும் என்றும், விமானப்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.