இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் பைசன் என்கிற திரைப்படத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ளார். இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படம் கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும். இதற்காக துருவ் விக்ரம் தீவிர கபடி பயிற்சி எடுத்து உள்ளார். இந்த படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. ‘பைசன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், இத்திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ‘பைசன்’ படத்தின் முதல்காட்சி பதாகையை படக்குழு தற்பொழுது வெளியாகியுள்ளது. மாரி செல்வராஜ் அவரது வெளியிட்ட பதிவில் “நான் எங்கிருந்து வருகிறேன் என்று உனக்கு தெரியும் ஏன் வருகிறேன் என்றும் உனக்கு தெரியும் வந்து சேர்ந்தால் என்ன செய்வேனென்றும் உனக்கு தெரியும் ஆதலால் …. நீ கதவுகளை அடைக்கிறாய் நான் முட்டிமோதி மூர்க்கமாய் உடைக்கிறேன்.
