தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜூனியர் என்.டி.ஆர். இவர் கடைசியாக ‘தேவரா’ படத்தில் நடித்திருந்தார். ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்திருந்த இப்படம் ரூ. 500 கோடிக்கு மேல் வசூலித்தது. இப்படத்தை தொடர்ந்து, பாலிவுட்டில் வார் 2 படத்தில் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து கே.ஜி.எப் படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக ‘என்டிஆர் 31’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமும் நந்தமுரி தரகா ராமாராவ் ஆர்ட்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இதில் பிரபல கன்னட நடிகை ருக்மினி வசந்த் கதாநாயகியாக நடித்து வருகிறார். கடந்த பிப்ரவரி 20ம் தேதி இந்த புதிய படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 22ம் தேதி ஜூனியர் என்.டி.ஆர் இந்த புதிய படத்திற்கான படப்பிடிப்பு பணியில் இணைந்துள்ளதாக படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்நிலையில் ஜூனியர் என்.டி.ஆரின் “என்டிஆர் 31” படம் அடுத்த ஆண்டு ஜூன் 25ல் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது
