தமிழ் மக்கள் மத்தியில் வரவு செலவு திட்டம் தொடர்பாக வீணான வதந்திகளைப் பரப்பி சுயலாப அரசியல் நடத்தும் தரப்பினர் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நடைபெற்றுவரும் வரவு செலவுத் திட்ட விவாதத்தில் நேற்று சனிக்கிழமை 21.11.2020 அன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே கடற்றொழில் அமைச்சர் .மேற் கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்
விவசாயம் – பெருந்தோட்டம் – கடற்றொழில் துறைகள் உட்பட எமது நாட்டின் வளங்களை கொண்ட உற்பத்தித் துறைகளின் வளர்ச்சியே தற்போதைய நாட்டின் தேவையாக உள்ளது. காலத்திற்கேற்ப தேவைகளை இனங்கண்டு அவற்றை இயன்றளவு பூர்த்தி செய்யும் வகையிலேயே இந்த வரவு செலவுத் திட்டம் அமைந்துள்ளது.
ஆனால் பாதுகாப்பு அமைச்சுக்கு பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ள விடயத்தினை பேசுபொருளாக்கி தமிழ் மக்கள் மத்தியில் வீண் புரளியைக் உண்டாக்கும் சுயலாப அரசியல் தமிழ் மக்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
பாதுகாப்பு அமைச்சு என்பது அதிகளவிலான ஆளணிகளை வைத்துக் கொண்டு பராமரிக்கின்ற ஓர் அமைச்சு மட்டும் அல்ல. அனைத்து இன மக்களும் பாதுகாப்பாக வாழக் கூடிய சூழலை ஏற்படுத்துகின்ற மக்களது பாதுகாப்பினை உறுதி செய்கின்ற நடவடிக்கைகளோடு சர்வதேச முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துகின்ற வகையில் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பினையும் அது கொண்டுள்ளது.
அதேநேரம் போதைவஸ்து பாவனையிலிருந்து இந்த நாட்டை விடுவித்தல் வறுமை ஒழிப்பு மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு கடலோரப் பாதுகாப்பு தொல்பொருள் திணைக்களம் கொரோனா தொற்றினைக் கட்டுப்;படுத்துதல் போன்ற மிக முக்கிய பணிக் கூறுகளை பாதுகாப்பு அமைச்சு கொண்டுள்ளது.
எம்மைப் பொறுத்தவரையில் கிடைக்கின்ற வளங்களை எல்லாம் பயன்படுத்தி எமது மக்கள் அனைத்து உரிமைகளும் பெற்றவர்களாக வாழ வேண்டும். அதற்கான அனைத்து தேவைகளையும் கௌரவமாக எமது மக்கள் பெற வேண்டும். அதற்காகவே நாம் உழைக்கின்றோம். அந்த வகையில் இந்த வரவு செலவுத் திட்டத்தை வரவேற்கின்றோம்.
ஆனால் மயானங்களை துப்பரவு செய்கின்ற இவர்கள் எமது மக்களின் துயரங்களை துப்பரவு செய்வதற்குத்; தயாராக இல்லை.
மேலும் இன்றைய தினம் உலகெங்கும் சர்வதேச கடற்றொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றமையை சுட்டிக்காட்டிய கடற்றொழில் அமைச்சர் கடற்றொழிலாளர் சமூகத்திற்கு தன்னுடை வாழ்த்துக்களை தெரிவித்ததுடன். அவர்கள் எதிகொள்ளுகின்ற அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வுகள் பெற்றுத் தரப்படும் என்றும் தெரிவித்தார்.