சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மகள் வீட்டில் இருந்து பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: எல்லாம் நன்றாக போய் கொண்டிருக்கிறது, எல்லாவற்றுக்கும் தீர்வு ஏற்படும். தீர்வு ஏற்படும்போது உங்களுக்கு நன்றி. ஏற்படும் தீர்வு நாட்டிற்கும், கட்சிக்கும் நல்லதாகவே இருக்கும். கடந்த 2 நாட்களாக ஊடகவியலாளர்கள் கொடுத்த அன்புத் தொல்லைக்கு நன்றி. பாஜகவுடன் கூட்டணி என்பது தொடர்பாக இப்போது சொல்ல முடியது. இவ்வாறு அவர் கூறினார்.
