தமிழ் சினிமாவில் அனைவராலும் கொண்டாடப்படும் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் ‘அமரன்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் ‘பராசக்தி’ படத்தில் நடிக்கிறார். இப்படம் செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளது. அதனை தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ‘மதராஸி’ படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில், ‘பராசக்தி’ படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் அமலாக்கத்துறை விசாரணையில் இருப்பதால் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்த படம் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது. அதாவது, மணிகண்டன் நடிப்பில் வெளியான ‘குட் நைட்’ படத்தை இயக்கி பிரபலமான இயக்குனர் விநாயக் சந்திரசேகர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் காதல் கதைக்களத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
