இலங்கையில் இன்று புதன்கிழமை மேலும் நால்வர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, கினிகத்தேன பகுதியைச் சேர்ந்த 74 வயதுடைய ஒருவரும் சியம்பலாபே பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய ஒருவரும் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், கொழும்பு-15 பகுதியைச் சேர்ந்த 73 வயதுடைய ஒருவரும் அதலுகம பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய ஒருவரும் இவ்வாறு வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளனர்.
இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 94ஆக அதிகரித்துள்ளது