கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.
இன்று (புதன்கிழமை) பிற்பகல் 3.30 மணிவரை பதிவான தகவலின் அடிப்படையில் இப்புள்ளிவிபரம் தயாரிக்கப்பட்டுள்ளது.
9 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளதாகவும் குறித்த புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது.
சீரற்ற வானிலை காரணமாக 2 குடும்பங்களை சேர்ந்த 9 பேர் உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளதாகவும் அப்புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கிளிநொச்சி கோணாவில் பகுதியில் பலத்த காற்றினால் பயன்தரு மரங்கள் முறிந்ததுடன், வீடுகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.