(வன்னி நிருபர்)
யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் பருத்தித்துறையைச் சேர்ந்த மூவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
பரிசோதனை ஆய்வு கூட முடிவுகள் குறித்து வெளியிடும் நாளாந்த அறிக்கையில் மேலம் குறிப்பிட்டிருப்பதாவது,
இன்று (டிச-05) யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 315 பேருக்கு கோவிட்-19 பரிசோதனை செய்யப்பட்டது.
பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்கு கொழும்பிலிருந்து வீடு திரும்பிய நிலையில் நேற்று முன்தினம் ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் குடும்ப உறுப்பினர்கள் மூவருக்கு இன்று தொற்று உறுதி செய்யப்பட்டது.
பரிசோதனைக்கு உட்பட்டவர்களில் ஏனையவர்களுக்கு தொற்று இல்லை.