(மன்னார் நிருபர்)
(05-12-2020)
மன்னார் மாவட்டத்தை தாக்கிய புரெவி புயலினால் பாதீக்கப்பட்ட மன்னார் மாவட்ட மக்களுக்கும், மீனவர்களுக்களுக்கும் தமது வாழ்வாதாரத்தை தொர்ந்து கொண்டு செல்ல அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மன்னார் மாவட்ட கடற்தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்ரின் சொய்சா தெரிவித்தார்.
மன்னாரில் இன்று சனிக்கிழமை(5) மதியம் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொடு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
யுத்தத்தினால் மிகவும் பாதீக்கப்பட்ட ஒரு பிரதேசமாக வட பகுதி காணப்படுகின்றது.எமது மக்கள் பல தடவைகள் இடம் பெயர்ந்து பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.
-கடந்த 3 ஆம் திகதி மன்னார் மாவட்டத்தை தாக்கிய புரெவி புயலானது எமது மாவட்டத்தில் உள்ள சகல மீனவ பிராமங்களையும் முற்று முழுதாக அழித்துள்ளது.
-குறிப்பாக மன்னார் மாவட்டம் முற்று முழுதாக அழிடைந்துள்ளது. இந்த நிலையில் மீனவர்கள் தமது வாழ்வாதாரத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லக்கூடிய சூழ் நிலையில் இல்லாத நிலை காணப்படுகின்றது.
எமது மீனவர்களின் பாதீப்பு தொடர்பாக நாங்கள் கடற்தொழில் திணைக்களத்தின் ஊடாகவும், மாவட்ட கடற்தொழில் சம்மேளனம் ஊடாகவும் கடற்தொழில் அமைச்சிற்கும், கடற்தொழில் திணைக்களத்திற்கும் நாங்கள் கோரிக்கையினை முன் வைத்துள்ளோம்.
-ஏற்கனவே பல தடவைகள் பாதீப்புக்கள் ஏற்பட்ட போது நாங்கள் தரவுகளையும்,பாதீக்கப்பட்டவர்களின் நிலமைகளையும் எடுத்துக் கூறியுள்ளோம். ஆனால் இது வரை நிவாரணங்களோ அல்லது கொடுப்பணவுகளோ வழங்கப்படவில்லை.
-ஆகவே இம்முறை மிக மோசமாக பாதீக்கப்பட்டுள்ள எமது மக்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை கொண்டு செல்வதற்காக மக்களினுடைய தேவையையும், அவர்களுக்கு ஏற்பட்ட அழிவுகளையும் கணக்கில் எடுத்து பாதீக்கப்பட்ட மக்களினுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு கடற்தொழில் அமைச்சர் , கடற்தொழில் திணைக்களம் சம்மந்தப்பட்ட திணைக்களங்கள் உரிய நிவாரணங்களை வழங்க நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும்.
-கடந்த 3 ஆம் திகதி ஏற்பட்ட புயல் காரணமாக மன்னார் மாவட்டத்தில் 1291 குடும்பங்கள் இடம் பெயர்ந்து தங்களுடைய வாழ்வாதாரத்தை தொடர முடியாத இக்கட்டான சூழ் நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.
மேலும் மன்னார் மாவட்ட மீனவர்களின் 59 டோலர் படகுகள் முற்று மழுதாக சேதமடைந்துள்ளது.
இதனால் அவர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். மேலும் 315 சிறிய படகுகள் பகுதி அளவிலும், முழுமையாகவும் சேதமடைந்துள்ளது. மேலும் மீனவர்களினால் கடற்கரையில் வைக்கப்பட்டிருந்த 1215 வலைத் தொகுதிகள் மற்றும் 103 வள்ளங்களும் பாதீக்கப்பட்டுள்ளது.
இதனால் பாதீக்கப்பட்ட மீனவர்களின் குடும்ப நிலமைகள் தொடர்பாகவும் உரிய அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் மீனவர்களின் 154 மீன் வாடிகள் முழுமையாக சேதமடைந்துள்ளது.
மேலும் படகுகளையும்,மீன் பிடி உபகரணங்களையும் பாதுகாக்கும் 154 பந்தல்கள் முற்று முழுதாக அழிவடைந்துள்ளது.
-மேலும் மீனவர்களின் 112 படகு வெளி இணைப்பு இயந்திரங்கள்(இஞ்சின்) கடலில் விழுந்து பாதீப்படைந்துள்ளது.
-இரண்டு வள்ளங்கள் கடலில் காணாமல் போயுள்ளது.வன்னி பிரதேச மக்கள் யுத்தத்தினாலும், இடப் பெயர்வினாலும் ஏற்கனவே பல்வேறு துன்பங்களை அனுபவித்த நிலையில், தற்போது புயல் தாக்கத்தினால் மிகவும் பாதீக்கப்பட்டுள்ளனர்.
எனவே கடற்தொழில் அமைச்சர் மன்னார் மாவட்ட மீனவர்கள் மற்றும் பாதீக்கப்பட்ட மக்களின் நிலமையை முற்று முழுதாக அறிந்துள்ளார்.எனவே பாதீக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை கருத்தில் கொண்டும்,மக்களின் எதிர்கால வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும் பாதீக்கப்பட்ட மக்களுக்கான இழப்பீட்டை மிக விரைவாக பெற்றுக் கொடுத்து மக்களை மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.என தெரிவித்தார்.
குறித்த ஊடக சந்திப்பில் மன்னார் மாவட்ட மீனவ சமாசத்தின் உப தலைவர் முஹமட் சாபீர்,மன்னார் மாவட்ட கடற்தொழில் சம்மேளனத்தின் நிர்வாக உறுப்பினர் மோகன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.