மஹர சிறைச்சாலை வன்முறை குறித்து தான் வெளியிட்ட கருத்தை பலரும் கேலி செய்த நிலையில் கைதிகள் ஒருவகை மாத்திரரை உட்கொண்டுள்ளமை மோதலின் போது எடுக்கப்பட்டதாக பொலிஸார் வெளியிட்டுள்ள காணொளியை பார்க்கும் போதும் எந்தவொரு முட்டாளுக்கும் தெரியவரும் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் விமல் வீரவன்சமேற்படி கருத்தைத் தெரிவித்தார். அவர் இது பற்றி மேலும் தெரிவிக்கையில் சிறை கைதிகளுக்குள் மோதல் இடம்பெற்றுள்ளதை நம்மால் அவதானிக்க முடிகிறது. கைதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையில் பிரச்சினை ஏற்பட்டிருந்தால் மோதலும் அவர்களுக்கு இடையிலேயே ஏற்பட்டிருக்க வேண்டும். அதன்மூலம் இது எவ்வாறான மோதல் என்பது தெரிகிறது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் அரசாங்கம் என்ற வகையில் அதனை கட்டுப்படுத்தக் கூடிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த வீடியோவை பாருங்கள். சாதாரண மனிதர்கள் போலவா நடந்து கொள்கின்றனர்? தனது சகோதர கைதிகள் மீது தாக்குதல் நடத்தி அங்கும் இங்கும் ஓடித் திரிகின்றனர்.
கைதிகள் கைதிகளையேகொலைசெய்வதில்லை. அப்படி நடந்தால் அது சாதாரண மனநிலையில் இருக்காது. அந்த வீடியோவை பார்க்கும் எந்தவொரு முட்டாளுக்கும் அது தெரிய வேண்டும் என்றும் தெரிவித்தார்.