(மன்னார் நிருபர்)
(14-12-2020)
மன்னார் கவிஞர் வை.கஜேந்திரன் எழுதிய ‘வைரமுத்துக்கள்’ சிறுவர் கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு இன்று திங்கட்கிழமை(14) மாலை 3.30 மணியளவில் மன்னார் நகர மண்டபத்தில் இடம் பெற்றது.
-மன்னார் வெற்றிக்கலைச் சங்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் தமிழமுது நண்பர்கள் வட்டத்தின் ஆலோசகர் எஸ்.விமலேஸ்வரன் தலைமையில் குறித்த குறித்த நூல் வெளியீட்டு நிகழ்வு இடம் பெற்றது.
-இதன் போது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டிமேல் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு குறித்த நூலினை வைபவ ரீதியாக வெளியீடு செய்த வைத்தார்.
அதனைத் தொடர்ந்து தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
குறித்த நிகழ்வில் விருந்தினர்களாக டிலாசால் இல்ல இயக்குனர் அருட்சகோதரர் எஸ்.ஸ்ரனிஸ்லஸ் , மன்னார் அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலை அதிபர் எம்.வை.மாஹீர் உற்பட விருந்தினர்கள் பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.