வவுனியா ஓமந்தை விளக்கு வைத்தகுளம் பகுதியில் யூரியா ஏற்றிச்சென்ற வாகனம் ஒன்று நேற்று இரவு விபத்திற்குள்ளாகியதுடன், அதன் சாரதி தப்பி ஓடியுள்ளார்.
யாழில் இருந்து கொழும்பு நோக்கி யூரியாவை ஏற்றிச்சென்ற வாகனம் ஓமந்தை பகுதியில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகியது.
இதனால் வாகனம் முற்றாக குடைசாய்ந்த நிலையில் அதன் சாரதி அவ்விடத்தில் இருந்து தப்பிச்சென்றுள்ளார்.
சம்பவ இடத்திற்கு சென்ற ஓமந்தை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்