“இலங்கையில் சிங்களவர்களைத் தவிர ஏனைய இன மக்களை சமமான நிலையில் நடத்த முடியவில்லையென்றால், அல்லது ஏனைய இனமக்கள் பல வகையான அரச அடக்கு முறைகளுக்குள் உள்ளானால், இந்த நாட்டை இனவாத நாடு என்று மட்டுமே அடையாளப்படுத்த முடியும்”
இவ்வாறு தெரிவித்துள்ளார், பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம். கொழும்பில் ஒரு ஆங்கில ஊடகத்திற்கு அளித்து குறுகிய ஓரு நேர்காணலில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் ” தமிழ் மக்கள் எதிர்பார்த்த உரிமைகள் எதுவும் மாகாண சபை முறைமை ஊடாகக் கிடைக்கவில்லை. இதனால், நானும் மாகாண சபை முறைமையை எதிர்க்கிறேன் என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பௌத்த பிக்குகள் மாகாண சபை முறைமைக்கு எதிராகக் கொண்டுள்ள நிலைப்பாடும் எனது நிலைப்பாடும் முற்றிலும் வேறுபாடுள்ளது.
மாகாண சபை முறைமையில் ஆரம்பத்தில் எதிர்பார்த்த நோக்கம் நிறைவேறவில்லை. மாகாண சபை முறைமைக்கு அப்பால் சென்ற அதிகார பரவலாக்கலை கொண்ட வேலைத்திட்டத்திற்கு செல்ல வேண்டுமென்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும். எனவே மாகாண சபைக்கு அப்பால் செல்ல வேண்டுமேயன்றி மாகாண சபை முறைமையை ஒழிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த நாட்டில் வாழும் தமிழ், முஸ்லிம் என அனைத்து இன மக்களுக்கும் சம உரிமையுள்ளது.” என்றார்.