இலங்கையில் ‘துறைமுக நகரம்’ என்னும் ‘குட்டியை’ ஈன்று அதனை சீனாவிடம் தத்துக் கொடுத்த நாடாக விளங்கும் இலங்கை போன்று செல்வந்த நாடான டென்மார்க்கில் அமையவுள்ள மிகப்பெரிய செயற்கை தீவுக்கான திட்டத்துக்கு டென்மார்க்கின் நாடாளுமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கோபன்ஹேகனின் வரலாற்றிலேயே மிகப் பெரிய மற்றும் டென்மார்க்கின் வரலாற்றில் மிகப் பெரிய உள்கட்டமைப்புத் திட்டங்களில் ஒன்றான இந்த திட்டத்திற்கு 85 வாக்குகள் ஆதரவாகவும், 12 வாக்குகள் எதிராகவும் பதிவாகின.
35,000 பேர் தங்குவதற்கான வீடு மற்றும் கோபன்ஹேகன் துறைமுகத்தை கடல் மட்டம் உயர்வதிலிருந்து பாதுகாக்க இந்த செயற்கை தீவு கைகூடவுள்ளது.
லினெட்டெஹோம் (டுலநெவவநாழடஅ) என பெயரிடப்பட்ட இந்த மாபெரும் தீவு, ரிங் ரோட், சுரங்கப் பாதை மற்றும் மெட்ரோ பாதை வழியாக பிரதான நிலத்துடன் இணைக்கப்படும்.
இந்த 1 சதுர மைல் (2.6 சதுர கி.மீ) திட்டம் இந்த ஆண்டின் இறுதிக்குள் ஆரம்பமாகவுள்ளது.
திட்டமிட்டபடி கட்டுமானம் ஆரம்பிக்கப்பட்டால், தீவின் பெரும்பாலான அஸ்திவாரங்கள் 2035ஆம் ஆண்டுக்குள் கட்டப்படும். 2070ஆம் ஆண்டுக்குள் இந்த திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும்.
லினெட்டெஹோம் திட்டத்தில் ஒரு அணை அமைப்பும் உள்ளது. துறைமுகத்தை கடல் மட்ட உயர்வு மற்றும் புயல் பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கும் நோக்கத்துடன் அவ்வணை அமைக்கப்பட இருக்கிறது.
சுமார் 400 கால்பந்து ஆடுகளங்களின் அளவிலான செயற்கைத் தீவைக் கட்டுவதற்கு முன், தீபகற்ப நிலப்பரப்பை மட்டும் உருவாக்க 80 மில்லியன் டன் மண் அப்பகுதிக்கு தேவைப்படும் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, இத்திட்டத்தை எதிர்த்து கோபன்ஹேகனில் உள்ள நாடாளுமன்ற கட்டடத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடினர்.
இலங்கையின் ‘துறைமுக நகரம்’ சீனாவிற்கு தத்துக் கொடுத்தது மட்டுமன்றி இலங்கை என்னும் தாயை அடவு வைத்து விட்டது போன்றது என்றே கருதப்படும் இவ்வேளையில், டென்மார்க் தேசமானது தான் நிர்மாணிக்கும இந்த புதிய நகரத்தை தானே நிர்வகிக்கும் என்றும் உறுதியாக நம்பப்படுகின்றது