ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களை 2021 முதல் தடை செய்ய அமைச்சர்கள் அமைச்சரவையில் முன்மொழியப்பட உள்ளது.
மத்திய சுற்றாடல் அதிகார சபை, குறிப்பாக ஷம்போ மற்றும் ஹேயர் ஜெல், பிளாஸ்டிக் மற்றும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்கள், சாக்லெட் பாக்கெட்டுகளை தடை செய்வது குறித்து கவனம் செலுத்தியுள்ளது.
இத்தகைய தயாரிப்புகளின் பயன்பாடு காரணமாக சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுள்ள விரிவான சேதங்கள் ஏற்பட்டுள்ளதை மத்திய சுற்றாடல் அதிகார சபை மேற்கொளிட்டுக் காட்டியுள்ளது.
மத்திய சுற்றுச் சூழல் அதிகார சபையின் பணிப்பாளர் ஜெனரல் ஹேமந்த ஜெயசிங்க இது தொடர்பில் கூறுகையில், குளிர்பானங்களைக் கொண்ட சிறிய பிளாஸ்டிக் போத்தல்களை பயன்படுத்துவதும் இந்த திட்டத்தின் கீழ் கட்டுப்படுத்தப்பட உள்ளது.
பிளாஸ்டிக் தயிர் கரண்டிகள் மற்றும் ஆடை பொதிகளில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கிளிப்களுக்கான சாத்தியமான மாற்று வழிகளையும் பரிசீலித்து வருவதாகவும் கூறினார்