பொதுவாக, வாக்களிக்கும் செயல்முறை பல்வேறு படிகளைக் கொண்டது. முதலில், வாக்குச்சாவடி அலுவலர் நமது வாக்காளர் பட்டியலில் பெயரை சரிபார்த்து, அடையாளச் சான்றினையும் சரிபார்ப்பார். இரண்டாவதாக, வாக்குச்சாவடி அதிகாரி நமது விரலில் மை வைத்து, ஒரு சீட்டை கொடுத்து, பதிவேட்டில் நமது கையொப்பத்தை வாங்கிக் கொள்வார். இறுதியாக, வாக்குச் சாவடிக்குச் சென்று, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் (EVM) நாம் விரும்பும் வேட்பாளரின் சின்னத்திற்கு எதிரே உள்ள வாக்குச் சீட்டு பொத்தானை அழுத்தி வாக்கைப் பதிவு செய்ய வேண்டும். இந்த ஒவ்வொரு நடைமுறைக்கும் சில நேரம் எடுக்கும்.
Ads by
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஸ்பெயின் நாட்டில் வில்லரோயா (வில்லரோயா) என்ற கிராமத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் மிகவும் வித்தியாசமானது, மிகவும் தனித்துவமானது. மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை வெறும் 7 ஆகும். தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்ற கேள்வியைத் தாண்டி வாக்களிக்கும் நடவடிக்கைகளை வேகமாகவும், எளிதாகவும் நடத்தி முடிப்பதே தேர்தலின் முக்கியக் குறிக்கோளாக இருந்தது.
El municipio riojano de Villarroya vota en 29 segundos y supera su récord de 2019
👉https://t.co/rfrPjtkwcq pic.twitter.com/uQJ2MpLcbL
— La Vanguardia (@LaVanguardia) May 28, 2023
கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், 8 வாக்காளர்கள் சுமார் 32.25 வினாடிக்குள் வாக்களித்த நிலையில், தற்போது வெறும் 29.52 வினாடிக்குள் வாக்களித்துள்ளனர். காலை 9 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதும், வாக்காளர்கள் சில நொடிகளில் தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர்.
இந்த கிராமத்தின் தற்போதைய மேயரான சால்வடார் பெரெஸ் 1973 இல் தொடங்கி 50 வருடங்களாக தொடர்ந்து அப்பொறுப்பில் இருந்து வருகிறார். வாக்குப்பதிவுக்கு பின்பு பேசிய அவர், “ஏழு வாக்காளர்களின் முழு ஆதரவு எனக்கு கிடைக்குமா என்று தெரியவில்லை. ஆனால், நான் இம்முறையும் வெற்றி பெறுவேன்” என்று தெரிவித்தார்.