முல்லைத்தீவு- ஒட்டுசுட்டான் நகர பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் 12 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
![](https://uthayannews.ca/wp-content/uploads/2020/09/mullai-acci-130920-seithy-3.jpg)
முல்லைத்தீவிலிருந்து மாங்குளம் நோக்கி பயணித்த பிக்கப் வாகனம் திடீரென மீண்டும் முல்லைத்தீவு பக்கமாக திரும்ப முற்பட்ட வேளை மாங்குளம் நோக்கி வந்த ஹயஸ் வாகனத்துடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது ஹயஸ் வாகனத்தில் பயணித்த 12 பேர் காயமடைந்த நிலையில் அருகில் இருந்தவர்களால் மீட்கப்பட்டு நோயாளர் காவு வண்டி ஊடாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.