மயிலாடுதுறை மாவட்டத்தில் 2 நாள் தொடர் மழை காரணமாக 6 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த இளம் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ஆறுகளில் தண்ணீர் வராததால் விவசாயிகள் காலம் தாழ்ந்து 1 லட்சத்து 71 ஆயிரத்து 250 ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி செய்திருந்த நிலையில் இரண்டு நாட்கள் பெய்த மழையினால் வடிகால் வசதியின்றி 6 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. தொடர்ந்து மழை பெய்யும் என்பதால் தண்ணீர் வடிய வழியின்றி பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
![தொடர் மழை: 6 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின](https://uthayannews.ca/wp-content/uploads/2023/11/6-thousand-nel-nasam.jpg)