தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்காக சட்ட மசோதாக்கள் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாக்கள் மீது நீண்ட நாட்களாக ஆளுநர் ஆர்.என். ரவி நடவடிக்கை எடுக்காமல் இருந்தார். இதுபோன்று பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களிலும் ஆளுநர்கள் ஒப்புதல் வழங்காமல் உள்ளனர். பஞ்சாப் மாநிலம் முதன்முதலாக உச்சநீதிமன்றத்தில் இதுதொடர்பாக வழக்கு தொடர்ந்தது. பின்னர் தமிழக அரசும் வழக்கு தொடர்ந்துள்ளது.
பஞ்சாப் மாநிலம் தொடர்ந்த வழக்கில் ஆளுநர்களுக்கு எதிராக பல்வேறு கருத்துகளை உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. வருகிற சனிக்கிழமை சிறப்பு சட்டமன்ற கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஆளுநர் 10-க்கும் மேற்பட்ட மசோதாக்களை தலைமை செயலகத்திற்கு திருப்பி அனுப்பி அனுப்பியுள்ளார். மசோதாக்கள் குறித்து விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு ஆளுனர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார்.